குஜராத்

காந்திநகர்: குஜராத் கடல்பகுதியில் போதைப்பொருள் கடத்திவந்த பாகிஸ்தான் படகை கடலோரக் காவல் படையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அதிலிருந்து ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களைக் கைப்பற்றியதோடு படகில் இருந்த 14 பாகிஸ்தானியர்களையும் காவல் படையினர் கைது செய்தனர்.
அகமதாபாத்: இந்தியாவின் குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் ரூ.230 கோடி மதிப்பிலான போதைப்பொருளை வைத்திருந்ததாக நம்பப்படும் 13 பேர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சூரத்: இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வசதி படைத்த சமண தம்பதியர் கிட்டத்தட்ட ரூ.200 கோடியை நன்கொடை அளித்துத் துறவறம் பூண்டனர். இப்போது ஆன்மிகப் பயணத்தை மேற்கொள்ள அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த சாலை உணவு விற்பனையாளர் அறிமுகப்படுத்தி உள்ள தங்க பானிபூரி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தங்கத் தட்டில் தங்கம், வெள்ளிப்படலத்துடன் பரிமாறப்படும் பானிபூரியுடன் துருவிய பாதாம், தண்டாய் ஆகிய கலவை சேர்க்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 பானிபூரிகள் ஒரு தட்டில் இருக்கும்.
அகமதாபாத்: இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பயின்று வரும் வெளிநாட்டு மாணவர்கள் சிலர் மார்ச் 16ஆம் தேதியன்று தாக்கப்பட்டனர்.